Saturday 28 April 2018

டான்ஶ்ரீ கேவியஸ் நீக்கம் சட்டவிதிகளுக்கு உட்பட்டதா? செபஸ்தியர் கேள்வி



புனிதா சுகுமாறன்

ஈப்போ-
மைபிபிபி கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியசை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளது நேர்மையற்றது எனவும் கட்சியின் தேசியத் தலைவரை நீக்கம் செய்ய தலைமைச் செயலாளருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என ஈப்போ மைபிபிபி தொகுதித் தலைவர் இருதயம் செபஸ்தியர் த/பெ அந்தோணிசாமி கேள்வி எழுப்பினார்.

டான்ஶ்ரீ கேவியசை கட்சியிலிருந்து நீக்குவதற்கு கடந்த 24ஆம் தேதி மத்திய செயலவை முடிவெடுத்துள்ளதாக கூறும் தலைமை செயலாலர் டத்தோ மோகன் கந்தசாமி, எதன்  அடிப்படையில் டான்ஶ்ரீ கேவியசை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளீர்கள்?

கட்சியின் சட்டவிதிகளின்படி கட்சி தேசியத் தலைவரை தவிர மத்திய செயலவையை கூட்டுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லாத நிலையில் தலைவரின் அனுமதியின்றி இந்த மத்திய செயலவையை கூட்டுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது.

டான்ஶ்ரீ கேவியசை கட்சியிலிருந்து நீக்கம் செய்யுமாறு தேசிய முன்னணி கேட்டுக் கொண்ட கடிதம் உள்ளதா?, தேசிய முன்னணி செயலாளரின் கடிதத்தை எப்போது பெற்றீர்கள், அதனை எங்களுக்கு காண்பிக்க முடியுமா? என செபஸ்தியர் வினவினார்.

ஒழுங்கு நடவடிக்கை பிரிவை அமைப்பதற்கு கட்சியின் மத்திய செயலவைக்கு அதிகாரம் உள்ள நிலையில் அந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை எப்போது அமைத்தீர்கள்?, அந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் யார்?

டான்ஶ்ரீ கேவியசை கட்சியிலிருந்து நீக்குமாறு ஒழுங்கு நடவடிக்கைக் குழு மத்திய செயலவைக்கு எப்போது முன்மொழிந்தது? என சராமாரியான கேள்விகளை தொடுத்த செயஸ்தியர், தேசியத் தலைவரின் கடமைகளை நிறைவேற்றும் பொறுப்புள்ள தலைமைச் செயலாளருக்கு, ஒரு தலைவரை நியமிக்கும் அதிகாரம் கிடையாது. தலைவரின் அனுமதியின்றி ஒரு நடவடிக்கையை அனுமதிப்பதும், செயல்படுத்தவும் முடியாது.

மேலும், மத்திய செயலவையுடன் கலந்தாலோசித்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் தேசியத் தலைவருக்கு உட்பட்டது ஆகும். சட்டவிதி அவ்வாறு இருக்க சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக டத்தோ லோக பால மோகனை தேர்வு செய்தது யார்?

டத்தோ லோக பால மோகனை வேட்பாளராக நியமிக்க மைபிபிபி தேசிய முன்னணிக்கு ஒப்புதல் கடிதத்தை வழங்கியது? என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் செபஸ்தியன் கேள்விகளை தொடுத்தார்.

டான்ஶ்ரீ கேவியசை கட்சியின் அனைத்துப் பதவிகளில் மட்டுமல்லாது உறுப்பினர் அந்தஸ்த்திலிருந்தும் நீக்கியது நியாயமானது அல்ல என செபஸ்தியர் உட்பட புந்தோங்கில் உள்ள 25 கிளைகளும் மத்திய செயலவையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

No comments:

Post a Comment