Thursday 26 April 2018

மைபிபிபி விவகாரம்; கேமரன் மலையில் தேமுவின் வெற்றியை பாதிக்காது- டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் (வீடியோ இணைப்பு)


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
மைபிபிபி கட்சியில் ஏற்பட்டுள்ள உட்பூசல் கேமரன் மலை நாடாளுமன்றத்தில் தேசிய  முன்னணியின் வெற்றியை ஒருபோதும் பாதிக்காது என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் அக்கட்சியிலிருந்து விலகி விட்டதாக அறிவித்தார். ஆனால் அவர் விலகவில்லை; நாங்கள்தான் நீக்கினோம் என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார்.

இவ்விவகாரத்தில் எது உண்மை, பொய் என்பது இன்னும் விளங்கவில்லை. அவர்களுக்குள்ளாகவே ஒரு குழப்பம் நீடிக்கிறது.

இத்தகைய ஒரு குழப்பமான சூழல் கேமரன் மலையில் தேசிய முன்னணியின் வெற்றியை பாதிக்காது. இவ்விவகாரத்தால் அங்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதால் தேசிய முன்னணி வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என இங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் இவ்வாறு கூறினார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகாவின் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் தேமு வேட்பாளராக களமிறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை காண:


No comments:

Post a Comment