Thursday 26 April 2018

சொந்த சின்னத்தில் போட்டியிட்டு பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுங்கள்- டாக்டர் ஜெயகுமாருக்கு இளங்கோ சவால்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 10 ஆண்டுகளக மக்களுக்கு சேவை செய்தது உண்மையென்றால் இன்று தனது சொந்த கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிட டாக்டர் மைக்கல் செயகுமார் தயக்கம் காட்டக்கூடாது என சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து வலியுறுத்தினார்.

மக்களுக்கான சேவையை முன்னெடுப்பதே நாங்கள் என மார்தட்டிக் கொள்ளும் பிஎஸ்எம் கட்சியினர் வரும் பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியுடன் இணையாத போதும் சொந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட  வேண்டும்.

'மக்களுக்காக சேவை செய்பவர்களே நாங்கள்தான்' என பிரச்சாரம் செய்து 2008ஆம் ஆண்டு வீசிய 'அரசியல் சுனாமியில்' சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை கைப்பற்றி கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் டாக்டர் ஜெயகுமார், இத்தேர்தலில் சொந்த கை சின்னத்தில் போட்டியிட தயக்கம் காட்டுகிறார்.

இந்த தயக்கம் அவருக்கு மக்களின் ஆதரவு இல்லை என்பதேயே புலப்படுத்துகிறது. தனது சொந்த கட்சி, ஆதரவாளர்களே 'கை' சின்னத்தில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் தன்னுடைய 10 ஆண்டுகால சேவை என்னவென்பதை டாக்டர் ஜெயகுமார் உணர்வாரா?

தன்னுடைய 'மக்கள் சேவை'க்கு மக்களிடம்  ஆதரவு உள்ளது என டாக்டர் ஜெயகுமார் கூறுவது உண்மையானால் சொந்த கட்சி சின்னத்தில் போட்டியிட்டு உங்களது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுங்கள்? என டாக்டர் ஜெயகுமாருக்கு இளங்கோ சவால் விடுத்தார்.

No comments:

Post a Comment