Thursday 26 April 2018

மும்முனைப் போட்டியா? போட்டியிலிருந்து விலக ஆலோசிக்கிறேன் - டாக்டர் ஜெயகுமார்



சுங்கை சிப்புட்-
மும்முனைப் போட்டியின் வழி சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேமு  எளிதில் வெற்றி கொள்வதை தவிர்ப்பதற்காக அங்கு பிஎஸ்எம் கட்சியின் சார்பில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்ள ஆலோசித்து வருவதாக டாக்ட்ர மைக்கல் ஜெயகுமார் அறிவித்துள்ளார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணியை எதிர்த்து பக்காத்தான் ஹராப்பானும் பிஎஸ்எம் கட்சியும் போட்டியிடுவது தேமுவுக்கு வெற்றி வாய்ப்பாக அமைவதை நாங்கள்  விரும்பவில்லை.

இத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகள் பிகேஆர் சின்னத்தின் கீழ் மட்டுமே போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ள நிலையில் பிஎஸ்எம் கட்சி இன்னும் அக்கூட்டணியில் இணையாததால் சொந்த சின்னத்தின் கீழ் போட்டியிட முடிவெடுத்தது.

ஆயினும், இத்தேர்தலில் தனித்து நின்று வாக்குகளை பிரித்து அதன் மூலம் தேமு எளிதில் வெற்றி பெற வழிவகுக்க வேண்டுமா? என கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பக்காத்தான் ஹராப்பான்- பிஎஸ்எம் ஆகியவற்றுக்கிடையிலான போராட்டத்தில் தேசிய முன்னணி எளிதில் வெற்றி பெறுவதை கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லை. மேலும், சுங்கை சிப்புட்டை எதிர்க்கட்சி கைப்பற்ற வழிவகுத்த நாமே அதை தேசிய முன்னணியிடம் இழக்க காரணமாகக்கூடாது என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆதலால், இந்த தேர்தலில் மும்முனை போட்டியை ஏற்படுத்தாமல் விலகி நிற்பதற்கு ஆலோசித்து வருவதாக டாக்டர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment