Wednesday 25 April 2018

குறைகள் வேண்டாம்; பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் - டத்தோஶ்ரீ தேவமணி

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
கடந்து போன குறைகளை பற்றி பேசி கொண்டிருக்க வேண்டாம். இனி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படுவோம் என சுங்கை சிப்புட் தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி குறிப்பிட்டார்.

கடந்த காலங்களின் நிகழ்ந்த தவறுகளை பற்றி இனி பேச வேண்டாம். அந்த தவற்றை மறந்து இனி அடுத்து வரும் காலங்களின் நமது எதிர்காலத்தை வளப்படுத்தி கொள்வதற்கான  நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்வோம்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கும் தனக்கு இங்குள்ள மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என குறிபிட்ட டத்தோஶ்ரீ தேவமணி, கடந்த பொதுத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின்னர் நடந்த சம்பவங்களை இனி பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.

குறைகளை பேசி கொண்டு நேரத்தை வீணடிப்பதை விட, இந்த தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதி செய்து இனி தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள மக்கள் முற்பட வேண்டும் என டத்தோஶ்ரீ தேவமணி கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment