Wednesday 28 March 2018

கொஸ்மோபொயிண்ட் கல்லூரியின் உபகாரச் சம்பளத்துடனான உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
எஸ்பிஎம் தேர்வை முடித்த மாணவர்கள் தங்களது உயர்கல்வியை சிறந்த முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும் எனும் நோக்கில் சுங்கை சிப்புட் தொகுதி மஇகா 'உயர்கல்வி வழிகாட்டி' நிகழ்வை நடத்தியது.

ஈப்போவில் உள்ள கொஸ்மோபொயிண்ட் கல்லூரியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்களுக்கு உயர்கல்வி மீதான வழிகாட்டல் வழங்கப்பட்டது.

அதோடு, கொஸ்மோபொயிண்ட் கல்லூரி வழங்கும் உபகாரச் சம்பளத்துடனான கல்வி வாய்ப்பு தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

திரளான மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன், முன்னாள் தொகுதித் தலைவர் லோகநாதன், எஸ்ஐடிஎஃப் அதிகாரி பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment