Saturday 31 March 2018

சுங்கை சிப்புட்; உள்ளூர் வேட்பாளரை களமிறக்கினால் தேமு வெற்றி உறுதி செய்யப்படும்- கிருஷ்ணன் (வீடியோ இணைப்பு)

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேசிய முன்னணி இழந்து விடக்கூடாது என கருதப்பட்டால் இம்முறை நடைபெறும் 14ஆவது பொதுத் தேர்தலில் உள்ளுரைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும் என மூத்த குடிமக்களில் ஒருவரான க.கிருஷ்ணன் (வயது 84)வலியுறுத்தினார்.

இப்போது நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளர் யார்? என்ற விவாதமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலானோரின் கருத்துபடி உள்ளூர் வேட்பாளரே அவர்களது தேர்வாக உள்ளது.

வெளியிலிருந்து வரும் வேட்பாளர் வெற்றி பெற்றால் அவரை தேடி நாங்கள்  தலைநகருக்குச் செல்ல வேண்டும்; தோற்றால் இந்த தொகுதியை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.

ஆனால், உள்ளூரைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக களமிறக்கினால் வென்றாலும், தோற்றாலும் அவர் இங்கேயே இருப்பார்; மக்களுக்கு சேவை செய்யுமாறு உரிமையுடன் குரல் உயர்த்துவோம்.

இங்குள்ள எதிர்கால சந்ததியினரின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தேமு சார்பாக களமிறக்கப்படும் வேட்பாளர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருப்பதை தாம் விரும்புவதாக தேசிய முன்னணியின் தீவிர ஆதரவாளரான கிருஷ்ணன் கூறினார்.

அவ்வகையில், இங்கு களமிறங்கி சேவையாற்றிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் யோகேந்திரபாலனுக்கு போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டால் நிச்சயம் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை தேமு வெற்றி கொள்ளும் என அவர் மேலும் சொன்னார்.

வீடியோ இணைப்புக்கு கீழே உள்ள லிங்க்- ஐ கிளிக் செய்யவும்:
https://web.facebook.com/BhaarathamOnlineNews/videos/292977271236116/



No comments:

Post a Comment