Sunday 25 March 2018

களைக்கட்டியது இயாசாவின் மாணவர் விழா 2018

கோ.பத்மஜோதி

கிள்ளான்-
மலேசிய இந்திய ஆத்ம சக்தி இயக்கம் கடந்த 8 ஆண்டுகளாக மாணவர் விழாவை மிகச் சிறப்பாகவும் துடிப்புடனும் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இவ்வாண்டிற்கான மாணவர் விழா கிள்ளானில் அமைந்துள்ள தமது தலைமையகத்தில் மிகச் சிறப்பாக தொடக்கம் கண்டது.

மாணவர்கள் கல்வி கேள்விகளிலும், புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். அதோடு, இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதுபோல சமுதாயத்தின் நற்பெயரை பள்ளிகளில் நிலைநாட்ட வேண்டும் என்று இந்த மாணவர் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

மாணவர்கள் கல்வி கேள்விகளில் மட்டுமில்லாமல் புறப்பாட நடவடிக்கைகள், பாரம்பரிய விளையாட்டுகளிலும் பீடுநடைபோட வேண்டும் என்ற உன்னத நோக்கில் இயாசா இயக்கம் மாணவர்களுக்காகவே ஒவ்வோர் ஆண்டும் பள்ளி விடுமுறை காலங்களில் இந்த மாணவர் விழாவை மேற்கொண்டு வருகிறது.

இந்த விழாவின் வழி, மாணவர்களின் திறமைகளை வெளிகொணரவும் இது தளமாக அமைகிறது என்றால் அது மிகையாகாது. படிவம் ஒன்று முதல் படிவம் ஐந்து வரை பயிலும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி மொத்தம் 18 போட்டிகளை இயாசா நடத்தி வருவதாக இவ்வியக்கத்தின் தலைவர் எம்.வசந்தகுமார் தெரிவித்தார். 

தற்போது, கிள்ளானில் மேற்கொண்டு வரும் இந்த மாணவர் விழாவை பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் பாரு என இதர மாநிலங்களில் பயிலும் இடைநிலைப்பள்ளி மாணவர்களும் நன்மை பயக்கும் வகையில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற இயாசாவின் நோக்கம் கூடிய விரைவில் நடத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

முதல் கட்டமாக, ஜோகூர் மாநிலத்தில் உள்ள 18 இடைநிலைப்பள்ளியில் மாணவர் விழாவை தொடக்கி விட்டதாகவும் கூறினர்.

இந்த மாணவர் விழாவை மாணவர்களே எடுத்து நடத்துவதுதான் இதன் சிறப்பு அம்சமாக திகழ்கிறது. ASIA METROPOLITAN UNIVERSITY நிர்வாக குழுவினர் இயாசா இயக்கத்திற்கு வெ.25,000 நிதியுதவி வழங்கியது. 



           

No comments:

Post a Comment