Tuesday 27 March 2018

ஜசெகவின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 நாட்களுக்கு இடைநீக்கம்


கோலாலம்பூர்-
மக்களவையை அவமதிப்பு செய்ததற்காக ஜசெகவைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

1எம்டிபி விவகாரம் தொடர்பில் மக்களவை சபாநாயகர் டான்ஶ்ரீ பண்டிகார் அமின் மூலியா மீது குற்றச்சாட்டு சுமத்தியதோடு அவரை அப்பதவியிலிருந்து விலகுமாறு தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா மோர் மிங், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார், புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹா ஆகியோர் கோரியிருந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பில் மன்னிப்பு கோருமாறு கடந்த மார்ச் 14ஆம் தேதி கடிதம் வாயிலாக டான்ஶ்ரீ பண்டிகார் அமின் மூலியா கோரியிருந்த போதிலும் அவர்கள் மன்னிப்பு கேட்க தவறியதால் இன்று 26ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை துணை சபாநாயகர்
டத்தோ ரோனால்ட் கியாண்டி அறிவித்தார்.

ஊழல் விவகாரத்தை மூடி மறைக்க கூட்டணி சேர வேண்டாம் எனவும் மக்களவை சபாநாயகர் பதவியிலிருந்து பண்டிகார் அமின் விலக வேண்டும் எனவும் இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரியிருந்தனர்.

No comments:

Post a Comment