Tuesday 29 August 2017

பிஐசிசியின் புதிய தலைவரானார் சுல்தான் அப்துல் காடீர்

- ரா.தங்கமணி
ஈப்போ-
பேராக் இந்தியர் வர்த்தக சபையின் (பிஐசிசி) புதிய தலைவர் சுல்தான் அப்துல் காதீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இச்சபையின் ஆண்டுக்கூட்டம் நடைபெற்ற நேற்று நடைபெற்ற வேளையில் 2017 முதல் 2019ஆம் ஆண்டு வரைக்குமான புதிய நிர்வாகத்திற்கான தேர்தல் சபையின் பணிமனையில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், உதவி செயலாளர், பொருளாளர், செயலவை உறுப்பினர்கள் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். உதவித் தலைவர், கெளரவச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு மட்டுமே போட்டி நிலவியது.
தலைவராக சுல்தான் காடீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக ரவிச்சந்திரன், உதவிச் செயலாளராக கணேசன், பொருளாளராக சாம்பசிவம், செயலவை உறுப்பினர்களாக பல்ஜிட் சிங், டாக்டர் ராஜாகிருஷ்ணன், லீலாவதி, பாலசந்திரன், வினிஜா, மணிமாறன், முனியம்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

உதவித் தலைவர் பதவிக்கு ஜோன் திவ்யநேசன், திருமதி சுகந்தி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 24 வாக்குகளை பெற்ற  ஜோன் திவ்யநேசன் உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருமதி சுகந்திக்கு 12 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
கெளரவச் செயலாளர் பதவிக்கு அசோகனும் ஜேக் விக்டரும் போட்டியிட்டனர். இதில் 25 வாக்குகள் பெற்ற அசோகன் கெளரவச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஜேக் விக்டருக்கு 10 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஒரு வாக்கு செல்லாதது என தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட வழக்கறிஞர் மதியழகன் தெரிவித்தார்.

மேலும், கணக்காய்வாளர்களாக சூல்கிப்ளி, யோகேஸ்வரன் ஆகியோரும் அறங்காலவர்களாக அமுசு ஏகாம்பரம், உதயசூரியன், சந்திரன் ஆகியோரை தலைவர் சுல்தான் காடீர் அறிவித்தார்.
இதனிடையே, கடந்த நான்கு ஆண்டுகளாக இச்சபையில் தலைவராக செயல்பட்ட மு.கேசவன், புதிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு இன்னும் ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இங்குள்ள வணிகர்களின்  மேம்பாட்டுக்கு வித்திட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த 4 ஆண்டுகளில் கேசவன்  மேற்கொண்ட சேவைகளை பாராட்டும் வகையில் சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் அவருக்கு சிறப்பு செய்ததோடு நினைவுப் பரிசும் வழங்கினார்.

No comments:

Post a Comment