Tuesday 29 August 2017

கோலகங்சார் இந்தியர் சங்க புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கோலகங்சார்-
கோலகங்சார் இந்தியர் சங்கத்தின் புதிய மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 80 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோலகங்சார் இந்தியர் சங்கம் சொந்த மண்டபத்தைக் கொண்டு சிறப்பாக இயங்கி வந்தததோடு மக்களுக்கான சேவையும் முன்னெடுத்தது.

அண்மையில்  இந்து நடைபெற்ற பூஜைக்கு பிறகு  இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்ட டத்தோ மு.பூபாலன் முதல் கல்லை எடுத்து வைத்தார்.

இந்த மண்டபம் பழுதடைந்த காரணத்தால் புதிய மண்டபம் நிர்மாணிக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் பஞ்சாட்சரம் பொன்னுசாமி தெரிவித்தார்.
கடந்தாண்டு நடைபெற்ற இத்தொகுதி இடைத் தேர்தலில் புதிய மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு ஏதுவாக பிரதமர் டத்தோஶ்ரீ  நஜிப் துன் ரசாக் 11 லட்சம் வெள்ளி மானியத்தை ஒதுக்கீடு செய்தார்.
அதற்கேற்ப பழைய மண்டபம் இருந்த இடத்தில் புதிய மண்டபத்தை கட்டுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் இதன் நிர்மாணிப்புப் பணி பூர்த்தியாகும் என  அவர் சொன்னார்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கோலகங்சார் தொகுதி மஇகா தலைவர் செல்வராஜா, பழனியப்பன், நாராயணன், விகே தம்பி, டாக்டர் வ.ஜெயபாலன், டத்தின் டாக்டர் உமா,  கட்டடக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.சந்திரன், பொறியியல் ஆலோசகர் செல்வநேசன், குத்தகையாளர் வோங், கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினரின் அதிகாரி இராமச்சந்திரன், சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் உட்பட சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment