Friday 25 August 2017

'அணைந்தது ஒரு சுடரொளி' நன்நெஞ்சங்களின் அனுதாபம்



-புனிதா சுகுமாறன்

'பிறப்பால் நான் தமிழன், மதத்தால் நான் முஸ்லீம்' என்ற இலக்கண கோட்பாட்டோடு வாழ்ந்து மறைந்தவர் 'சமுதாயச் சுடர்' டத்தோ ஹாஜி தஸ்லீம். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

அன்னாரின் மறைவு பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியதாகும். அவரின் மறைவு தமிழுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடம் ஆகும் என பலர் தங்களது அனுதாபத்தை தெரிவித்தனர்.
கி.மணிமாறன், சுங்கை சிப்புட்.

'சமுதாயச் சுடர்' டத்தோ ஹாஜி தஸ்லீமின் மரணத்தால் தமிழுக்கு ஒரு  வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மொழி, இனம் ஆகியவற்றுக்கு சேவையாற்றுவதில் இவருக்கு நிகர் இவரே.  தமிழ்மொழி வாழும் காலம்வரை அன்னாரின் புகழும் என்றும் நிலைத்திருக்கும்.

சுஷ்மிதா முருகன்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

ஜெயசீலன் ராஜு

சமுதாயச் சுடர் டத்தோ ஹாஜி தஸ்லீம் அவர்களின் ஆத்ம சாந்தி அடைய அனைவரும் இறைவனை பிராத்திப்போம். அன்னாரை இழந்து துயருறும் குடும்பத்தினருக்கும், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

கார்த்திக் சந்திரன், சுங்கை சிப்புட்.

மண்டியிடாத தன்மான தமிழன்....
மண்ணின் மைந்தனாய் மாறினார்....
மதத்தால் நான் இஸ்லாமியர்....
பிறப்பால் நான் தமிழன் என்றார்....
சொன்ன சொல்லிற்கு உயிரூட்டினாய்....
தாய் தமிழைத் தாலாட்டினாய்....
தமிழ்ப்பள்ளியின் உண்மையான காவலன்....
தமிழினத்தின் நிகரில்லா தலைமகன்....
ஆழ்ந்த நித்திரை கொண்டார்....
காலன் உன்னை காவு வாங்கினான்....
எங்களை போன்று அவனும் உன் ரசிகன்....
இன்று நீர் புதைக்கப்படுகிறாய்....
என்றும் தமிழினத்தின் விதையாய்....
எங்கள் நினைவில் நிலைத்திருப்பாய்....
கண்கள் குளமானது குரல் தளர்ந்தது....
இனி என்றும் உன் நினைவே எங்களுக்கு....

டாக்டர் புனிதன்

டத்தோ ஹாஜி தஸ்லிம்!
நமது முகவரி!
நமக்காக உழைத்து,
துன்பத்திலும் சிரிக்கும்,
நமது தேவைகளை பூர்த்தி செய்யும்!

இமயத்தின் வலிமை
தன் தோலில் சுமக்கும்,
சோதனை வந்தாலும்,
தனக்குள்ளே தாங்கும்,
டத்தோ ஹாஜி தஸ்லீம் குணம்!
யாரிடம் கிடைக்கும்?

டத்தோ ஹாஜி தஸ்லீம் மரணம்,
சொல்லமுடியாத ,இழப்பு!
இந்த இழப்புக்கு,பதில் ஏதுமில்லை,
சொல்வதற்கு வார்த்தைகளில்லை!

மறைந்தது உடல் தான்.
டத்தோ ஹாஜி தஸ்லீம் எண்ணமெல்லாம்,
நம்முடன் தான் !

தந்தையின் ஆன்மா
சாந்தி பெற வேண்டுவோம்!
அவர் வாழ்ந்த வாழ்க்கையை,
நாம் அர்த்தமாக்குவோம்!
எங்களது  ஆழ்ந்த அனுதாபங்கள்!

முரளி கண்ணன்

'சமுதாயச் சுடர்' ஹாஜி தஸ்லீம் மறைந்தார், மலேசிய இந்தியர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த ஒரு ஜாம்பவனாக அவர் திகழ்ந்தார். தனது கொள்கையில் ஒரு தீவிர போராட்டவாதியாக விளங்கினார்.'இண்டர்லோக்' நாவல் போராட்டத்தில் அவர் முன்னெடுத்த போராட்டங்கள் என்றும் மறக்க முடியாததாகும். ஒரு மிகச் சிறந்த ஆன்மாவை நம் சமூகம் இழந்து தவிக்கிறது.

No comments:

Post a Comment