Wednesday 30 August 2017

சோமெல் மாஜு பாலர் பள்ளியில் தேசிய தினக் கொண்டாட்டம்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

சோமெல் மாஜு பாலர் பள்ளி மாணவர்களிடன் தேசிய தினக் கொண்ட்டாட்டம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

இங்கு தாமான் முஹிபா ஜெயாவில்  பல ஆண்டுகளாக இயங்கி வரும் இப்பாலர் பள்ளியில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் ம இகா தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல் கலந்து கொண்டார்.
நாட்டுக்கு சிறந்த குடிமக்களை உருவாக்குகின்ற மிகப் பெரிய பொறுப்பு ஆசிரியர்களிடமே உண்டு.  மாணவர்களிடையே தேசப்பற்றை விதைப்பது ஆசிரியர்களின் கடமையாகும் என அவர் சொன்னார்.
பாலர் பள்ளி உரிமையாளர் கணேசன், பள்ளி வரலாற்றையும் மாணவர்களுக்கான போதனா முறையையும்  விவரித்தார்.
இந்நிகழ்வில் பாலர் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேசியக் கொடிகள் டத்தோ சக்திவேல் எடுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் தொகுதி மஇகா  தலைவர் இளங்கோவன் முத்து, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment