Tuesday 31 July 2018

குற்றச்செயல்களில் இந்தியர்கள் ஈடுபடாமலிருக்க சமயப் போதனைகளை புகுத்துவோம்- தினகரன் கோவிந்தசாமி


ரா.தங்கமணி

ஈப்போ-
குற்றச் செயல்களில் இந்தியர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ள நிலையில் அதனை களைவதற்கு இளம் தலைமுறையினரை சமய போதனைகள் ஈடுபட வைக்க வேண்டும் என பேரா மாநில சட்டமன்ற சபாநாயகரின் இந்திய பிரதிநிதி தினகரன் கோவிந்தசாமி வலியுறுத்தினார்.

நமது சமயம் அன்பையும் அறத்தையும் போதிக்கக்கூடியதாகும். அன்பை செலுத்த வேண்டிய நாம் இன்று வன்முறை கலாச்சாரத்தில் ஈடுபடுவது சமயத்திற்கு முரணானதாகும்.

ஆகவே, சமயம் சார்ந்த நிகழ்வுகளில் பள்ளி மாணவர்களையும் இளைஞர்களையும் ஈடுபட வைக்க அவர்களது பெற்றோர் அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் நமது சமயம் வளர்ச்சி காண்பதோடு சமுதாயம் முன்னேற்றம் காணும் என இங்கு மஞ்சோங் வட்டார மலேசிய இந்து சங்க பேரவையின் திருமுறை ஓதும் போட்டியில் சிறப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வை சிறப்பாக புகழ்ந்து பேசிய  தினகரன், மங்சோங் மாவட்ட மலேசிய இந்து சங்க வட்டாரப் பேரவையின் வளர்ச்சிக்காக 5,000 வெள்ளி நன்கொடையை அதன் தலைவர் பெரியசாமியிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் 15 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment