Monday 30 July 2018

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; மலேசிய பெண்மணி உட்பட 10 பேர் பலி


ஜகார்த்தா-
இந்தோனேசியா, லொம்பாக் பகுதியை உலுக்கிய நிலநடுக்கத்தில் மலேசியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் மரணமடைந்தார்.

இன்றுக் காலை 5.47 மணியளவில் 6.4 ரிக்டர் அளவு கோலில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதில் வீடுகளும் கட்டடங்களும் மோசமான சேதமடைந்தன.

இதில் மலேசியாவைச் சேர்ந்த  சித்தி நோர் இஸ்மாவிடா (வயது 30) எனும் பெண்மணி மரணமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன.

மரணமடைந்த பெண்மணியின் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன என கூறிய இந்தோனேசியாவுக்கான மலேசிய இணை தூதர்  ஸம்ஸாரி சஹாரான், இங்குள்ள 150 மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்றார்.

கடுமையான சேதத்தை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தில் 10 பேர் பலியானதாக இந்தோனேசிய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுப்படவில்லை.

No comments:

Post a Comment