Monday 30 July 2018

கிந்தா இந்தியர் சங்கம் ஏற்பாட்டில் 'கல்வியால் உயர்வோம்' கல்வி பயிலரங்கு


புனிதா சுகுமாறன்

ஈப்போ

கிந்தா இந்திய சங்கத்தினர் ஏற்பாட்டில் டாக்டர் காடீர் இப்ராஹிம் வழிகாட்டலில்  2018ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.ஆர், பி.டி.3 மற்றும் எஸ்.பி.எம் பயிலும் மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு இன்று இங்குள்ள  கிந்தா இந்தியர் சங்க் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது

'கல்வியால் உயர்வோம்' எனும் தலைப்பிலான  இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றிய  கிந்தா இந்தியர் சங்கத்தின் செயலாளர் தி.கணேசன்,  கிந்தா இந்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில்  இந்நிகழ்வு 3ஆவது ஆண்டாக நடைபெறுவதாகவும் இதைப்போன்ற நிகழ்வு மாணவர்களுக்கு தேர்வு காலகட்டத்தில் தங்களை எவ்வாறு தயார் நிலையில் வைத்துக்கொள்வது என்பதற்கு உருதுனையாக அமைகிறது என்றார்.

இதனிடையே, பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசனின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட உ.முத்துசாமி அதிகாரப்பூர்வ திறப்புரை செய்து வைத்ததோடு  மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்றால் இப்பொழுதிருந்தே தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

ஒவ்வொரு மாணவருக்கும் தனித்திறமை உண்டு.  நாளைய தலைவராக உங்களை உருவாக்க கல்வி மிகவும் அவசியம் எனவும் கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்கிற பழமொழிக்கு ஏற்றவாறு தங்களை செதுக்கிகொள்ள வேண்டும் என்றார்

இந்நிகழ்வில் அறிமுக உரை நிகழ்த்திய பேராரிசிரியர் டாக்டர் காடீர் இப்ராஹிம், மாணவர்கள் கல்வியில் மேம்பாடு காணும் பொருட்டு எந்த ஒரு மாணவன் கஷ்டமான பாடத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கிறானோ அவனே நாளைய சாதனையாளராக திகழ்கிறான் என்றார்.

நிகழ்வில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்ருக்கும் தன்முனைப்பு வழிகாட்டலை மிகவும் தெளிவாக  விவரித்தார்.

இந்நிகழ்வின், நிறைவுரையாற்றிய புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி. சிவசுப்பிரமணியம் விடாமுயற்சியுடன் கல்வி கற்றால் கண்டிப்பாக தேர்வு காலங்களில் அனைத்து மாணவர்களும் சிறந்த தேர்ச்சியை பெறலாம் என தமது உரையில் கூறினார்.

'கல்வியால் உயர்வோம்' நிகழ்வை மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த கிந்தா இந்தியர் சங்கத் தலைவர் செளந்திர பாண்டியன், அவர்தம் செயலவை உறுப்பினர்கள் ஆகியோர்

இந்நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, தொழிலதிபர் டத்தோ ஏ.கே.சக்திவேல், அரசியல் பிரமுகர்களுக்கு சிறப்பு செய்தனர்.

இந்நிகழ்வில் 1,500 மாணவர்கள்   மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்


           

No comments:

Post a Comment