Sunday 1 July 2018

அம்னோவின் தலைவர் யார்?- 'தலையெழுத்து ' இன்று தீர்மானிக்கப்படுகிறது

கோலாலம்பூர்-

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ள அம்னோ கட்சியின் தேசியத் தலைவர் யார்? என்பது இன்று நிர்ணயிக்கப்படுகிறது.

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அம்னோவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து  முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் விலகினார்.

அம்னோவின் இடைக்கால தலைவராக முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி பொறுப்பேற்றிருந்தார்.

இன்று நடைபெறும் அம்னோ தேசியத் தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிடவுள்ளனர்.  டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, குவாங் மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலி ஹம்சா, முன்னாள் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின்,  பண்டார் துன் ரசாக் தொகுதி அம்னோ உறுப்பினர் முகமட் இக்பால் மரிசேர், இஸ்கண்டார் புத்ர் தொகுதி அம்னோ உறுப்பினர் முகமட் யூசோப் மூசா ஆகியோர் களத்தில் குதித்துள்ளனர்.

டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி,  தெங்கு ரஸாலி ஹம்சா, கைரி ஜமாலுடின் ஆகியோருக்கே கடுமையான போட்டி நிலவுகிறது.

இன்றைய தேர்தலில் அம்னோவின் தேசியத் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதை பொறுத்தே தேசிய முன்னணியின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment