Saturday 20 May 2017

இரட்டை குடியுரிமை: மலேசிய குடியுரிமை இயல்பாகவே ரத்தாகும்


இரட்டை குடியுரிமை: மலேசிய குடியுரிமை இயல்பாகவே ரத்தாகும்!



ஜோகூர் பாரு-
இரு நாடுகளின் குடியுரிமையை கொண்டிருக்கும் மலேசியர்கள் தங்களது மலேசியக் குடியுரிமையை தானாக இழந்து விடுவர் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

மலேசியர்களின் குடியுரிமை இயல்பாகவே ரத்து செய்யப்படுவதற்கு மலேசிய  அரசியலமைப்பு அனுமதிக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை சட்டமன்ற உறுப்பினர் அந்தஸ்த்தை இழந்த புஜுட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திங் தியோங் சோன் விவகாரம் குறித்து கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

இது வெறும் அரசியல் சார்ந்தது அல்ல. மாறாக நாட்டின் கோட்பாடுகளை உள்ளடக்கிய விவகாரம் ஆகும்.

சரவாக் மாநில சட்டமன்றத்தின் இம்முடிவை எதிர்த்து சம்பந்தப்பட்ட கட்சியினர் நீதிமன்ற நடவடிக்கையை நாடலாம் என அவர் விவரித்தார்.

No comments:

Post a Comment