Tuesday 23 May 2017

"அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி மலேசியா"

"அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி மலேசியா"



நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடந்து முடிந்தது. 'இந்தப் படப்பிடிப்பிற்கு ஆதரவு வழங்கி வந்த மலேசிய இந்தியர்களுக்கு நன்றி' என குறிப்பிட்டுள்ளார்  நடிகர் சிவகார்த்திகேயன்.

படப்பிடிப்பு முடிந்தவுடன் மலேசியத் தமிழர்களை சந்தித்து உரையாடி சிவா, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்தப் படத்தின் இயக்குனர் மோகன் ராஜா கூறுகையில், எனக்கு பிடித்த மலேசியாவில் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு இது. 'வேலைக்காரன்' படத்திற்கான  படப்பிடிப்பு மலேசியாவில் முடிவடைந்துவிட்டது. மலேசிய தமிழர்களின் அன்புக்கும் வரவேற்புக்கும் வாழ்த்துகள் என டுவிட்டர் அகப்பக்கத்தில் பதிவு செய்தார்.

'எம். குமரன்  S/O மஹாலட்சுமி', 'தில்லாலங்கடி' என ஏற்கெனவே இரண்டு படங்களை மலேசியாவில் இயக்கி இருந்ததாக இயக்குனர் மோகன் ராஜா கூறினார்.

No comments:

Post a Comment