Tuesday 16 May 2017

'மெகா மை டஃப்தார்' வெற்றியடைய ஒன்றுபடுவோம்!

'மெகா மை டஃப்தார்' வெற்றியடைய
ஒன்றுபடுவோம்!


புத்ராஜெயா-
இந்நாட்டிலுள்ள இந்தியர்களிடையே நிலவும் ஆவணப் பிரச்சினைகளை களைவதற்கு ஏதுவாக நாடு தழுவிய அளவில் 'மெகா மைடஃப்தார்' நடவடிக்கையை வெற்றியடையச்  செய்தவற்கு அனைவரின் கரங்களும் இணைய வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்திற்கான வியூக வரைவுத் திட்டத்தின் (புளூபிரிண்ட்) நிருவாகக் குழுவில் செயல்படக்கூடிய அதிகாரிகளுடன் பல தரப்பினர் இணைந்து சேவையாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அதன் அடிப்படையில், தேசிய முன்னணியில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கக்கூடிய பங்காளி, தோழமைக் கட்சிகள், பொது இயக்கங்கள் என பல தரப்பினரின் உதவியோடுஆவணப் பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்களைக் கண்டறிந்து, அவர்களை நேரில் சென்று அணுகி பிரச்சினைகளைக் களைவதற்கான ஆயத்த வேலைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.



அதனைத் தொடர்ந்து அந்தந்த பதிவிலாகாக்களில் பதிவு செய்வதற்கான வேலைகளும் மேற்கொள்ளப்படும். ஏறக்குறைய 12 பொது இயக்கங்களின் ஆதரவில் விரைவான முயற்சியில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன

ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியின் அடிப்படையில் எல்லோரும் ஒன்றாக இணைந்து இத்திட்டம் வெற்றிப் பெறச் செய்ய பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார் 'மெகா மை டஃப்தார்' நடவடிக்கைக்கான கலந்துரையாடலில் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.

எழுத்து: உஷா ராணி

No comments:

Post a Comment