Sunday 14 May 2017

"தாதா" கதையா? - வீண் வேலை ரஜினிக்கு மிரட்டல் கடிதம்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் தொடர்பில் மும்பையிலிருந்து அவருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

'கபாலி' வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் மும்பையிலுள்ள தாராவி பகுதியை மையப்படுத்தி தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் கதை மும்பையில் உள்ள நிழல் உலக தாதா ஒருவரின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இதையடுத்து, மும்பை 'தாதா' ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "என்னுடைய வளர்ப்புத் தந்தை, ஹாஜி அலி மஸ்தான் 'பாரதிய மைனாரிட்டி சுரக்ஷா மஹாசங்' என்ற கட்சியை நிறுவியவர். இயக்குநர் ரஞ்சித், உங்களை வைத்து எடுக்கிற படத்தில் என்னுடைய தந்தையை மும்பையின் கள்ளக் கடத்தல் தலைவனாகவும், நிழல் உலக தாதாவாகவும் சித்தரித்துக் காட்ட உள்ளதாக பத்திரிகைகளில் படித்தேன்.

இது வேண்டாத வீண் வேலை. என் தந்தை மீது குற்றச் செயலுக்காக எந்த நீதிமன்றமும்  தண்டனை அளிக்கவில்லை. தேவையில்லாமல் என் தந்தை பெயரை நீங்கள் இழிவாக சித்தரித்து படத்தில் காட்சிப்படுத்தினால், அதன் பின் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்" என்று கூறியுள்ளார். ரஜினியின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

No comments:

Post a Comment