Saturday 20 May 2017

நஜிப் முன்னிலையில் தயாரிப்பாளரை அறைந்த நடிகர்

நஜிப் முன்னிலையில்தயாரிப்பாளரை அறைந்த நடிகர்!

பெட்டாலிங் ஜெயா-
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் முன்னிலையில் திரைப்படத்துறையைச் சேர்ந்த இரு கலைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்றிரவு இங்குள்ள புத்ரா ஜெயாவில் பிரதமர் முன்னிலையில் திரைத்துறை சார்பில் தேசிய உருமாற்றம் 2050(TN50) விவாதம் நடைபெற்றது.

இதில் புகழ்பெற்ற நடிகர் சுலைமான் யாசின் ,மெட்ரோவெல்ட் பிக்சர்ஸ் தயாரிப்பாளரின் செயல் முறை அதிகாரியுமான டேவிட் தியோவுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

நிகழ்வு   மதிப்பீட்டாளர் ரோஷாம் நோரை தியோ விமர்சித்தபோது, திடீரென உள்ளே நுழைந்த சுலைமான் அவரை அறைந்தார்.

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தியோ, சுலைமானை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டதோடு பின்னர் மீண்டும் இவ்விவாதம் சகஜநிலைக்கு திரும்பியது.


No comments:

Post a Comment