Thursday 23 August 2018

ஏஇஎஸ் அபராதத் தொகையினால் அரசாங்கத்திற்கு லாபம் இல்லை - அந்தோணி லோக்


சிரம்பான் -
தானியங்கி கண்காணிப்பு முறையினால் (ஏஇஎஸ்) விதிக்கப்படும் அபராதத் தொகையினால் அரசாங்கத்திற்கு எவ்வித லாபமும் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எவ்வித லாபமும் இல்லாத சூழலில் ஏஇஎஸ் அபராதத் தொகையை செலுத்திய வாகனமோட்டிகளுக்கு அதனை திருப்பிக் கொடுக்க முடியாது.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின் போது ஏஇஎஸ் அபராதத் தொகை அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில் அதனால் எவ்வித லாபமும் இல்லை.

தற்போதைய ஏஇஎஸ் அபராதத் தொகையை அரசாங்கம் ரத்து செய்துள்ள நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய அமலாக்க முறையை அரசாங்கம் அறிமுகம் செய்யும் என அவர் சொன்னார்.

வரும் 31ஆம் தேதியுடன் ஏஇஎஸ் கேமராவின் இரு நிறுவனங்களுக்கான ஒப்பந்தம் நிறைவு பெறுவதை முன்னிட்டு அதனை மீண்டும் தொடர அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என சிரம்பானில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அந்தோணி லோக் இவ்வாறு கூறினார்.


No comments:

Post a Comment