Saturday 25 August 2018

ஜசெகவை விமர்சித்தவர்கள் இன்று பாஸ் கட்சியுடன் நட்பு கொண்டுள்ளனர் - கணபதி ராவ் தாக்கு


ரா.தங்கமணி

பாங்கி-
பாஸ் கட்சியுடன் கடந்த காலத்தில ஜசெக கொண்டிருந்த உறவை விமர்சனம் செய்தவர்கள் இன்று அக்கட்சியுடன் நட்பு கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு
உறுப்பினர் வீ.கணபதி ராவ் தெரிவித்தார்.

நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவே மக்கள் கூட்டணியில் பாஸ் கட்சியுடன் ஜசெக நட்பு கொண்டிருந்தது.

ஆனால் கொள்கை முரண்பாடு காரணமாக பாஸ் கட்சியுடனான உறவை ஜசெக முறித்துக் கொண்ட பின்னர் மக்கள் கூட்டணி கலைக்கப்பட்டது.
பாஸ் கட்சியுடன் அன்று நாங்கள் கொண்டிருந்த நட்பை விமர்சனம் செய்த மசீச, மஇகா, கெராக்கான் ஆகிய கட்சிகள் இன்று அதே பாஸ் கட்சியுடன் நட்புறவை பாராட்டுவது வேடிக்கையாக உள்ளது என்று நேற்று நடந்த பலாக்கோங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பரப்புரையில் உரையாற்றுகையில் கணபதி ராவ் குறிப்பிட்டார்.

அன்று நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது பல்வேறு இன்னல்களை அனுபவித்தோம். பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள், நீதிமன்ற வழக்குகள் என பல வகையில் துன்புறுத்தப்பட்டோம்.

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கீழ் 495 நாட்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட அனுபவத்தையும் தாம் எதிர் கொண்டிருந்தேன்.

ஆனால், இவை பொருட்படுத்தாமல் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்ததனால் இன்று நாம ஆட்சி அதிகாரமிக்க ஆளும் கட்சியாக திகழ்கிறோம்.

கடந்த கால ஆட்சியில் நிகழ்ந்த தவறுகளை நாம் மறந்திடாமல் பலாக்கோங் இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ள நம்பிக்கைக் கூட்டணி (ஜசெக) வேட்பாளரை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று கணபதி ராவ் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment