Wednesday 22 August 2018

மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்- சுங்கை சிப்புட் பிஎஸ்எம் கோரிக்கை


ரா.தங்கமணி

ஈப்போ-
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பேரா மாநில அரசு  தீர்வு காணும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று சுங்கை சிப்புட் பிஎஸ்எம் கட்சி மகஜர் வழங்கியது.

இவ்வட்டாரத்தில் நிலவும் வெள்ளப் பிரச்சினை, குறைந்த வருமானம் பெறுவோருக்கான குறைந்த விலை வீடமைப்புத் திட்டம், பூர்வக்குடியினரி நிலங்கள் ஆக்கிரமிப்பு, 10 முதல் 40 வருடங்களுக்கு மேலாக விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளை வெளியேற்றுவது, உட்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கான வேலை வாய்ப்புகள் போன்ற 10 பிரச்சினைகளை உள்ளடக்கி இந்த மகஜர் வழங்கப்பட்டது.

இன்றுக் காலை மாநில அரசு செயலகத்தில் முன்னாள் சுங்கை சிப்புட்  நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார், பிஎஸ்எம் கட்சியினர் ஆகியோர் இந்த மகஜரை வழங்கினர்.

மக்களின் தேர்வாக அமைந்துள்ள மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட வேண்டும் என வலியுறுத்திய  டாக்டர் ஜெயகுமார், கடந்த தேசிய முன்னணி அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்தது போன்று தற்போதைய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம்  செயல்படக்கூடாது என வலியுறுத்தினார்.

மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி கைருல் ஸஹாரி பின் அமினுடின் இந்த மகஜரை பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment