Wednesday 29 August 2018

குடியுரிமை அல்லாத இந்தியர்கள் விவகாரத்தில் பக்காத்தான ஹராப்பபான் தலைவர்கள் 'பொய்' சொல்லியுள்ளனர்- டத்தோஸ்ரீ நஜிப்

கோலாலம்பூர்-
குடியுரிமை இல்லாத இந்தியர்கள் விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் தொடர்ந்து ' பொய்' மட்டுமே கூறி வருகின்றனர் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றஞ்சாட்டினார்.

இந்நாட்டில் குடியுரிமை இல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

ஆனால், தற்போது குடியுரிமை இல்லாழ இந்தியர்கள் 3.853 மட்டுமே என கூறியுள்ள உள்துறை அமைச்சர் அஸிஸ் ஜமான், இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

இது குறித்து கருத்துரைத்துள்ள டத்தோஸ்ரீ நஜிப், இந்தியர்களின் குடியுரிமை விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் 'பொய்யையே' கூறி வந்துள்ளனர் என்பதற்கு இதுவே சான்றாகும்.

குடியுரிமை அல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது என அப்போதைய எதிர்க்கட்சியினர் குறை கூறிய போதிலும், அதை மறுத்த தேசிய முன்னணி அரசாங்கம் குடியுரிமை அல்லாத இந்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்தது என டத்தோஸ்ரீ நஜிப் சொன்னார்.


No comments:

Post a Comment