Saturday 25 August 2018

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஈராண்டுகள் போதாது- துன் மகாதீர்

கோலாலம்பூர்-
நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தமக்கு ஈராண்டுகள் போதாது என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

தம்முடைய பிரதமர் பதவிக் காலம் ஈராண்டுகள் மட்டுமே என்பது தொடக்ககட்ட முடிவாகும். தொடக்கத்தில் காணபட்ட முடிவுகளின்படி ஈராண்டுகளுக்கு பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதாக இணக்கம் காணப்பட்டது.

ஆனால், ஆட்சியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றிய பின்னர் நாடு எதிர்நோக்கிய கடன் சுமை உட்பட நிர்வாக முறைகேடுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைய வேண்டியுள்ளது.

நாட்டின் சீர்திருத்தத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் இருப்பதால் இந்த ஈராண்டு காலம் போதிய அவகாசமாக கருத முடியவில்லை. இந்த ஈராண்டுகளில் அதனை சாதிக்க முடியாது என்று தெ மலேசியன் ரிசர்வ் நாளேட்டிற்கு வழங்கிய நேர்காணலில் துன் மகாதீர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment