Saturday 31 March 2018

பினாங்கு விமான நிலையத்திற்கு அருகிலிருந்த கிடங்குகளில் தீ


ஜோர்ஜ்டவுன் -

பினாங்கு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கிடங்குகளில் ஏற்பட்ட தீச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்றிரவு  ஏற்பட்ட இத்தீச்சம்பவத்தில் 4 கிடங்குகளில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இரவு 10.50 மணியளவில் தகவலை பெற்ற தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் நான்கு கிடங்குகளும் 90 விழுக்காடு முற்றிலுமாக சேதமடைந்தது என குறிப்பிட்ட பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப் படை குழுத் தலைவர் சாடோன் மொக்தார் கூறினார்.

அந்த கிடங்குகளில் உணவுப் பொருட்கள், மரச்சாமான்கள், மின்சார சாதனங்கள் ஆகியவை கிடத்தி வைக்கப்பட்டதோடு மறுசுழற்சி செய்யும் கிடங்கும் உள்ளடங்கும்.

மறுசுழற்சி கிடங்கில் ஏற்பட்ட தீயே இதர கிடங்குகளுக்கு பரவியுள்ளதாக தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என சாடோன் மொக்தார் குறிப்பிட்டார்.

இந்த தீச்சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைதளங்கில் பரவிய வேளையில், பினாங்கு விமான நிலையத்தில்தான் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சில தகவல்கள் பரவி பரபரப்பை உண்டாக்கின.

ஆயினும் இத்தீச்சம்பவத்தில பினாங்கு விமான நிலையம் பாதிக்கப்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.

No comments:

Post a Comment