Friday 30 March 2018

தொகுதி எல்லை மறுசீரமைப்பு; அரசாங்கத்தின் தலையீடு கிடையாது- பிரதமர் நஜிப்


கோலாலம்பூர்-

தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ள தொகுதி எல்லை மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.

நாட்டுக்கும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தேர்தல் ஆணையம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதாக கூறிய அவர், அவற்றின் செயல் நடவடிக்கைகளில் தலையிடுவது கிடையாது.

தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள தொகுதி எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கையை சில கட்சிகள் ஆதரிக்கவில்லை என்ற போதிலும் அரசாங்கம் அதன் நடவடிக்கைகளில் தலையிடுவதும் அதிகாரம் செலுத்துவதும் இல்லை.

தொகுதி எல்லை மறுசீரமைப்பு தொடர்பிலான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 129 உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் மீதான விவாதத்திற்கு பின்னர் மக்களவையில் பேசியபோது பிரதமர் நஜிப் இவ்வாறு கூறினார்.

14ஆவது பொதுத் தேர்தலில் அமல்படுத்தப்படவுள்ள இந்த தொகுதி எல்லை மறுசீரமைப்பில் கூடுதலாக எவ்வித தொகுதிகளும் உருவாக்கப்படவில்லை.

மாறாக, 12 நாடாளுமன்றத் தொகுதிகள், 28 சட்டமன்றத் தொகுதிகள் பெயர்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment