Tuesday 27 March 2018

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைத்தால் 'மீஃபா'வுக்கு தலைமை ஏற்பேன் - சிவகுமார் அதிரடி



ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
புத்ராஜெயாவை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றினால் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்திற்கு (மீஃபா) நிச்சயம் தலைமை தாங்குவேன் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் தெரிவித்தார்.

மக்களவை கூட்டத் தொடரின்போது மீஃபா, பக்தி சக்தி, ஶ்ரீ முருகன் நிலையம் போன்ற அரசு சார்பற்ற பொது இயக்கங்களுக்கு 'செடிக்' மூலம் வழங்கப்பட்ட மானியம் எவ்வளவு? என்று கேள்வி எழுப்பினேன்.

ஆனால், செடிக் அமைப்பிற்கும் சம்பந்தப்பட்ட பொது  இயக்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பதால் அதனை பொதுவில் சொல்ல முடியாது என மக்களவையில் பதிலளிக்கப்பட்டது.

ஆனால், மீஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன், அண்மையில் செடிக் மூலம் மீஃபாவுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இந்த மானிய விவரங்களைதானே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ஆனால் ஒப்பந்த உடன்படிக்கையை காரணம் காட்டி பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி பதிலளிக்க மறுத்த வேளையில் டத்தோ மோகன் எவ்வாறு அவ்விவரங்களை பொதுவின் அறிவித்தார்?

டத்தோ மோகனால் மானிய விவரங்களை பொதுவில் அறிவிக்கும்போது டத்தோஶ்ரீ தேவமணி நாடாளுமன்றத்தில் அறிவிக்க மறுத்தது ஏன்?
மேலும், மீஃபாவுக்கு தலைமை ஏற்க விரும்பினால் தனக்கு விட்டுக் கொடுக்க விருப்பதாக மோகன் கூறியுள்ளார். மீஃபாவின் தலைவர் பதவியை எனக்கு விட்டு கொடுக்க வேண்டியதில்லை.

ஏனென்றால் வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றினால் நிச்சயம் மீஃபாவுக்கு தலைமை தாங்குவேன் என இங்கு தாமான் செமிரியில் நடைபெற்ற 'புதிய அரசாங்கம்; புதிய நம்பிக்கை ' எனும் தலைப்பில் கலந்து கொண்டபோது சிவகுமார் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment