Thursday 29 March 2018

தொகுதி எல்லை சீரமைப்பு; 129 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது



கோலாலம்பூர்-
தொகுதி எல்லை மறுசீரமைப்பு தொடர்பான  அறிக்கையை இன்று மக்களவையில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்த நிலையில் 129 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு  அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தொகுதி எல்லை மறுசீரமைப்பு தீபகற்ப மலேசியாவில் 98 நாடாளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.தீபகற்ப மலேசியாவில் மொத்தம் 165 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன.

இந்த அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் தேசிய முன்னணி சார்பில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. விவாதம் முடிந்த நிலையில் அறிக்கை ஏற்றுக் கொள்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும்  80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

இந்த தொகுதி எல்லை சீரமைப்பில் சில தொகுதிகளின் பெயர்கள் மாற்றம் கண்டுள்ளதோடு சில தொகுதிகள் வாக்காளர் எண்ணிக்கை குறைக்கப்பட்டும் சில தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டும் உள்ளது.

தொகுதி எல்லை சீரமைப்பு இன்று முடிவடைந்துள்ள நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் நாடாளுமன்றத்தை கலைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment