Sunday 23 December 2018

நடவடிக்கைக்கு தயார்; மன்னிப்பு கோரமாட்டேன் - ராமசாமிக்கு சைட் சித்திக் பதிலடி

கோலாலம்பூர்-
பிரதமர் துறை அமைசர் பொன்.வேதமூர்த்தியை பதவி விலகச் சொன்னதில் தாம் தவறு இழைத்திருந்தால் அதற்கான நடவடிக்கைக்கு தயாராகவே இருக்கிறே. இவ்விவகாரத்தில் தாம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் சைட் சித்திக் கூறினார்.

வேதமூர்த்தியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு பெர்சத்து கட்சி இளைஞர் பிரிவு பிரதமர் துன் மகாதீரிடம் மகஜர் வழங்கியதற்கு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கண்டனம் தெரிவித்தார்.

இச்செயல் துன் மகாதீரின் அமைச்சரவையை அவமதிக்கும் வகையில் உள்ளது சைட் சித்திக் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ராமசாமி வலியுறுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுத்த சைட் சித்திக், நான் தவறு இழைத்திருந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். அதற்கு நான் அஞ்சப்போவதில்லை. ஆனால் வேதமூர்த்தியை பதவி விலக்குமாறு மகஜர் வழங்கியது தொடர்பில் மன்னிப்பு கோரப்போவதில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment