Monday 10 December 2018

சிலாங்கூர் மாநில ஜசெக தலைவரானார் கோபிந்த் சிங்

ரா.தங்கமணி

பெட்டாலிங் ஜெயா-
இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில ஜசெக தேர்தலில் தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

2018- 2020 வரைக்குமான நிர்வாக செயற்குழுவுக்கான தேர்தல் இன்று பெட்டாலிங் ஜெயா, சிவிக் சென்டரில் நடைபெற்றது.

இதில் துணைத் தலைவராக என் யோங் ஹியான் வா, உதவித் தலைவர்களாக இங் சுவி லிம், வீ.கணபதிராவ், செயலாளராக ரோனி லியூ, துணைச் செயலாளராக ஒங் கியான் மிங், பொருளாளராக இங் ஸி ஹான், துணை பொருளாளராக லீ சிங் ஹுங், நிர்வாகச் செயலாளராக பிர்யான் லாய், நிர்வாக துணைச் செயலாளராக தீ பொன் ஹோக், லாவ் வெங் சான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment