Wednesday 5 December 2018

ஜோ லோவ் உட்பட மேலும் 4 பேருக்கு பிடியாணை வெளியிட்டது நீதிமன்றம்


கோலாலம்பூர்-
ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) ஊழல் விவகாரம் தொடர்பில் தொழிலதிபர் ஜோ லோ என்றழைக்கப்படு லோவ் டெக் ஜோ உட்பட 5 பேருக்கு பிடியாணையை வெளியிட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம்.

1எம்டிபியின் பண மோசடி தொடர்பிலான 7 குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்திற்கு வர தவறியதால் இந்த பிடியாணை வெளியிடப்பட்டது.

ஜோ லோவ் உட்பட மேலும் நால்வரில் ஒரு வழக்கறிஞரும் அடங்குவார்.

1எம்டிபி வழக்கறிஞர் ஜாஸ்மின் லோ அய் ஸ்வான், முன்னாள் தலைமை
இயக்குனர் கெசே தாங் கெங் சே, முன்னாள் அதிகாரிகள் கெ சோ ஹெங், எரிக் டான் கிம் லோங் ஆகியோரே அந்த நால்வர் ஆவர்.

No comments:

Post a Comment