Saturday 29 December 2018

'பரிவுமிக்க அரசாங்கம்' திட்டத்தின் கீழ் புது வீடு பெற்றனர் லெட்சுமணன் தம்பதியர்


ரா.தங்கமணி

சபாக் பெர்ணாம்-
மிக மோசமாக சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த கு.லெட்சுமணன் - திருமதி ஜெயா தம்பதியர்  சிலாங்கூர் மாநிலத்தின் அரசின்  'பரிவுமிக்க அரசாங்கம்' எனும் திட்டத்தின் கீழ் புதிய வீட்டை பெற்றுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் புதிய வீட்டை பெறுவதற்கு முயற்சி செய்த இவர்களுக்கு சபாக் பெர்ணாம் மாநகர் மன்ற உறுப்பினர் ஹரிகுமார் முயற்சியில்  'பரிவுமிக்க அரசாங்கம்' திட்டத்தின் கீழ் 52,000 வெள்ளி செலவில் புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

சபாக் பெர்ணாம், கம்போங் ராஜாவில் சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு இக்குடியிருப்பின் சற்று தொலைவில் இந்த புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தம்பதியர் புதிய வீட்டை பெறுவதற்கு பெரும் உதவி புரிந்த மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஹரி குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment