Tuesday 18 December 2018

முகமட் அடிப் மரணமடைந்தார்

கோலாலம்பூர்-
சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது தாக்கப்பட்டதீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் இன்று மரணமடைந்தார்.

பலத்த காயங்களுக்கு ஆளாகி ஐஜேஎன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முகமட் அடிப் நுரையீரலில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக மரணமடைந்தார்.

சுவாசக் கருவிகளின் துணையின்றி சுவாசிக்க சிரமப்பட்ட முகமட் அடிப்புக்கு தீவிர சிகிச்சை அளக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இரவு 9.41 மணியளவில் உயிரிழந்ததாக வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சர் ஸூராய்டா கமாருடின் தெரிவித்தார்.

கடந்த மாதம் 26ஆம் தேதி சீபிலட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நுழைந்த கும்பல் ஒன்று இந்தியர்களை தாக்கியது. பதிலுக்கு இந்தியர்களும் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் அங்கு கலவரம் மூண்டது.

சம்பவ இடத்தில் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது முகமட் அடிப் சில தரப்பினரால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்தார் என்று தீயணைப்பு, மீட்புப் படை கூறியது.

No comments:

Post a Comment