Wednesday 12 December 2018

அருள் கந்தா கைது

கோலாலம்பூர்-
1எம்டிபி நிறுவனத்தின் முன்னாள் தலைவர்  அருள் கந்தாவை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்தது.

2016 பிப்ரவரியில் 1எம்டிபி நிறுவனத்தின் இறுதி கணக்கறிக்கையில் சில சாரம்சங்களை நீக்கியது தொடர்பில் இன்று காலை 9.45 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.

அருள் கந்தா கைது செய்யப்பட்டுள்ளது உண்மைதான். நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வேளையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்புடன்  இவர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அருள் கந்தாவில் கைது நடவடிக்கையை காலை 10.35 மணியளவில் அவரின் வழக்கறிஞர்கள் உறுதிபடுத்தினர்.

No comments:

Post a Comment