Thursday 20 December 2018

அம்னோவின் பொதுத் தலைவராக நஜிப் நியமிக்கப்பட வேண்டும்- டத்தோ லொக்மான்

பெட்டாலிங் ஜெயா-
அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகி இருப்பதாக  டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி அறிவித்துள்ள நிலையில் அம்னோவின் பொதுத் தலைவராகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் நியமிக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லொக்மான் நோர் அடாம் தெரிவித்தார்.

தலைவர் பொறுப்பை துணைத் தலைவரிடம் ஸாஹிட் ஹமிடி ஒப்படைத்துள்ளது துன் மகாதீரின் வெற்றியாகவே கருதப்படுகிறது.

அம்னோவின் இன்றைய இக்கட்டான சூழலில் அதனை காப்பாற்றுவதற்கும் தேமு எம்பிக்கள் கட்சி தாவலில் ஈடுபடாமல் இருக்கவும் அனுபவமிக்க தலைமைத்துவம் தேவைப்படுகிறது.

அதற்கேற்ப டத்தோஶ்ரீ நஜிப்பை அம்னோவின் பொதுத் தலைவராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் டத்தோஶ்ரீ ஸாயிட் நியமனம் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment