Sunday 23 December 2018

வேதமூர்த்தி அமைச்சராக நீடிக்க வேண்டும்- ம.இ.ச. வேண்டுகோள்

கோலாலம்பூர்-
பிரதமர் துறை அமைச்சராக பொன்.வேதமூர்த்தி  நீடிக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் தாக்கப்பட்டு பின்னர் மரணமடைந்த சம்பவத்திற்கு மலேசிய இந்து சங்கம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.

ஆனால் அச்சம்பவங்களை காரணம் காட்டிஅமைச்சர் வேதமூர்த்தியை பதவி விலகச் சொல்வது நியாயமானது அல்ல. நாட்டின் நல்லிணக்கத்திற்கும் இந்து சமய விவகாரங்களுக்கும் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் வேதமூர்த்தி அப்பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மோகன் ஷாண் வெளியிட்டுள்ள அறிக்கை


No comments:

Post a Comment