Monday 17 December 2018

அவண்ட்- ஓவியாவின் முயற்சியில் ஓவியமும் கவிதையும் இணைந்த 'கலையும் கவியும்- அத்தியாயம் 1'


ரா.தங்கமணி

ஒரு புகைப்படம் ஆயிரம் கதை சொல்லும் என்பார்கள். ஒவ்வொரு புகைப்படக்காரரின் ஒவ்வொரு கிளிக்குகளும் எதை சொல்கின்றன என்பதை நாமாகவே எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் ஓர் ஓவியக் கலைஞனின் சித்திரம் என்ன சொல்ல வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியாது. ஒரு ஓவியனின் கற்பனைத் திறனில் வெளிபடும் ஓவியத்திற்கு அர்த்தம் சொல்வது எளிதானது அல்ல.  அது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகும்.

அப்படிப்பட்ட சாத்தியத்தைதான் ஓவியர்  அவண்ட் (நிமலேஷ் ஆதிமூலம்), பேசும் கவிதைகள் ஓவியா (வாணி ஒமாபதி) மேற்கொண்டிருக்கும் முயற்சி இன்று 'கலையும் கவியும் - அத்தியாயம் 1' என்ற நூலாக உருமாறியுள்ளது.

'பேசும் கவிதைகள்' எனும் பெயரில் கவிதைகள் புனைவது மட்டுமல்லாது திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் ஓவியா மலேசிய கலைத்துறையில் நன்கு அறிமுகமானவர்.

'கலையும் கவியும்' கவிதை நூல் உருவாக்கம் குறித்தி மனம் திறந்தனர் ஓவியா, அவண்ட்.

இன்றைய இளைஞர்களை சமூக வலைத்தலங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை ஆக்கிரமித்துள்ள நிலையில் எங்களது 'கலையும் கவியும்' படைப்பை சமூக வலைதளங்களில் பகிர்ந்தோம்.

2017ஆம் ஆண்டு எங்களின் கூட்டுப்பணி தொடங்கியது.  அவண்ட் வரையும் ஓவியங்களுக்கு நான் கவிதை எழுதி அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தோம். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை எங்களது படைப்புகள் பகிரப்படும்போது அது பெரும்பாலானோரை கவர்ந்தது என்கிறார் ஓவியா.

அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான குட்டி கவிதைகள் வாசகர்களை ஈர்த்தது. அவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட
கவிதைகளின் தொகுப்பே 'கலையும் கவியும் - அத்தியாயம் 1' நூல் ஆகும்.

கலை மீது கொண்ட ஆர்வத்தினால் முழு நேர ஓவியராக உருவெடுத்த வேளையில்  'அவண்ட் ஆர்ட்ஸ்' என்ற நிறுவனத்தை வழிநடத்தி பிறர் ரசிக்கும் வகையான ஓவியங்களை வரைந்து ஓர் ஓவியனாக வளர்ச்சி கண்டுள்ளேன். ஓவியாவுடன் இணைந்து ஓவியத்துடன் கவிதை படைக்கும் முயற்சி வாசகர்களின் ரசனையை மேலும் தூண்டியது என ஓவியர் அவெண்ட் விவரித்தார்.

சமூக ஊடகங்களில் கிடைக்கப்பெற்ற ஆதரவை தொடர்ந்து அதனை கவிதை தொகுப்பாக வெளியிட நினைத்தோம். அதன் அடிப்படையிலே கவிதை நூல் உருவாக்கம் கண்டது.

'கலையும் கவியும் - அத்தியாயம் 1' கவிதை நூலில் 44 கவிதைகள் வண்ணப் பக்கங்களாக அச்சிடப்பட்டுள்ளன. புது கவிதைகளாக புனையப்பட்டுள்ள இக்கவிதைகள் பெரும்பாலும் மாணவர்களை ஈர்த்துள்ளது. அதனாலேயே அவர்களது பெற்றோர்கள் இந்நூலை வாங்கிச் சென்று ஆதரவு கொடுக்கின்றனர் என ஓவியா கூறிகிறார்.

2009ஆம் ஆண்டு முதல் கவிதை படைத்து வரும் ஓவியா தமிழ்ப்பள்ளி ஆசிரியரும் ஆவர். ஆசிரியர் பணி பாதிக்கப்படாத வகையில் கவிதை புனைவதோடு திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதி வருகிறார்.
மிகப் பெரிய அளவில்  நூல் வெளியீடு செய்யாமல் தற்போது சமூக ஊடகங்களின் மூலமே நூல் விற்பனை செய்யப்படுகிறது. புத்தகத்தின் விலை வெ.23.90 மட்டுமே. (தபால் செலவு உள்ளடக்கம்)

'கலையும் கவியும்- அத்தியாயம் 1' கவிதை நூல் வேண்டுபவர்கள்  +6018-462 7889 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது avandartz@gmail.com , lyricistoviya@gmail.com என்ற இணையதள முகவரியை நாடலாம்.

No comments:

Post a Comment