Saturday 22 December 2018

வேதாவுக்கு எதிராக பேரணி- மகஜர் சமர்பிப்பு

புத்ராஜெயா-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் முகமட் காசிம் தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவத்தின் எதிரொலியாக பிரதமர் துறை அமைச்சர் பதவியிலிருந்து பொன்.வேதமூர்த்தியை நீக்க வேண்டும் என வலியுறுத்தி சில முஸ்லீம் அமைப்பினர் இன்று அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

இன்று  புத்ராஜெயா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் பிரதமர் துறை அலுவகத்திற்கு வந்த நூற்றுக்கணக்கானோர் வேதாவுக்கு எதிராக  குரல் எழுப்பினர்.

இதில் கலந்து கொண்டவர்கள் மறைந்த முகமட் அடிப்பின் படத்தை ஏந்தியதோடு 'வேதாவை நீக்கவும்' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தினர்.

இந்த அமைதி மறியலில் சில தலைவர்கள் உரையாற்றிய பின்னர் பிரதமர் அலுவலகத்திற்கு நடந்துச் சென்று மகஜர் சமர்ப்பித்தனர்.

No comments:

Post a Comment