Tuesday 11 December 2018

மக்களவையில் சிவராஜ் அமரலாம்- சபாநாயகர்


கோலாலம்பூர்-

மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையிலும் நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜ் அனுமதிக்கப்படுவார் என்று மக்களவை சபாநாயகர் டத்தோ முகமட் அரிஃப் முகமட் யூசோப் தெரிவித்தார்.

தேர்தலின் போது பண முறைகேட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி சிவராஜின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தேர்தல் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. தேர்தல் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து சிவராஜ் மேல் முறையீடு செய்துள்ளார்.

இதனிடையே, கடந்த 5ஆம் தேதி மக்களவையிலிருந்து வெளியேறுமாறு சிவராஜுக்கு மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையில் சிவராஜின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுபடியாகும் என்பதால் அவர் மக்களவையில் அமரலாம் என்று டத்தோ முகமட் அரிஃப் கூறினார்.

No comments:

Post a Comment