Thursday 6 December 2018

தேமு கூட்டணியை கலைக்கச் சொல்வது அநாகரீகமானது- வீரன் சாடல்


ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை இழந்த தேசிய முன்னணி கூட்டணியை கலைக்குமாறு மசீச கோரிக்கை விடுப்பது ஏற்புடையதல்ல என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மு.வீரன் குறிப்பிட்டார்.

61 ஆண்டுகாலமாக நாட்டை வழிநடத்திய தேசிய முன்னணி தற்போது ஆட்சி அதிகாரத்தை இழந்து விட்ட சூழலில் இக்கூட்டணியை கலைத்து விடுமாறு கோரிக்கை விடுப்பது ஏற்புடையதாகாது.

முன்பு எதிர்க்கட்சியாக இருந்த பக்காத்தா ஹராப்பான் கூட்டணி இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. இதே போன்று தற்போது எதிர்க்கட்சியாக உள்ள தேசிய முன்னணியும் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

தேமு கூட்டணியில் இடம்பெற்றிருப்பது மசீசவுக்கு பிடிக்கவில்லையென்றால் கூட்டணியில் வெளியேறலாம். அதற்காக கூட்டணியை கலைக்கச் சொல்லக்கூடாது. ஏனெனில் இக்கூட்டணியில் எங்களது கட்சியும் (மஇகா) இடம்பெற்றுள்ளது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது நம்முன்னே உள்ள சவால்களை எதிர்கொண்டு மீண்டும் தேமுவை ஆட்சியில் அமர வைப்பரதற்கான வழிவகையை நாம் கண்டறிய வேண்டும். அதனை விடுத்து  கூட்டணியை கலைத்து விடுமாறு கோரிக்கை விடுப்பதெல்லாம் ஏற்புடையது அல்ல. அதனை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

தேசிய முன்னணிக்கென்று ஒரு நீண்ட வரலாறு பாரம்பரியம் உண்டு. இக்கூட்டணியை கலைப்பதனால் அந்த வரலாறும் அழிந்து போகலாம் என்று வீரன் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment