Thursday 6 December 2018

ஐசெர்ட் பேரணியில் தேமு பங்கேற்கக்கூடாது - மணிமாறன் வலியுறுத்து

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
ஐசெர்ட் சாசனத்திற்கு எதிராக நடத்தப்படும் பேரணிக்கு தேசிய முன்னணி (தேமு) ஆதரவு அளிக்கக்கூடாது என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர்  கி.மணிமாறன் தெரிவித்தார்.

61 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி புரிந்த தேமு எந்தவொரு பேரணியையும் அங்கீகரித்ததில்லை; அதற்கு அனுமதியும் கொடுக்கவில்லை.

இப்போது ஆளும் பக்காத்தான் அரசாங்கத்திற்கு எதிராக தேசிய முன்னணி ஐசெர்ட் பேரணியை ஆதரிப்பதும் அதில் பங்கேற்பதும் நமது பாரம்பரியத்திற்கு ஏற்புடையதல்ல.

மேலும், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அந்த ஐசெர்ட் சாசனத்தில் கையெழுத்திடாது என கூறியுள்ள போதிலும் இந்த பேரணி நடத்தப்படுவது அவசியமற்றதாகும்.

முன்பு தேமு ஆட்சியில் இருந்தபோது ஐநா சபையுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்த சூழலில் இப்போது ஐசெர்ட் சாசனத்திற்கு எதிரான பேரணியில் பங்கேற்கக்கூடாது என்று மணிமாறன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment