Thursday 20 December 2018

சாலை விபத்து- தந்தை பலி; மகள்கள் படுகாயம்

கோத்தா திங்கி-
இரு வாகனங்கள் நேரெதிரே மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் தந்தை கொல்லப்பட்ட வேளையில் இரு மகள்கள் கடுமையாக காயங்களுக்கு இலக்காகினர்.

இன்று அதிகாலை 3.51 மணியளவில் செனாய்- டெசாரு நெடுஞ்சாலையில் இவ்விபத்து நிகழ்ந்தது.

இதில் மற்றொரு காரில் பயணித்த நான்கு பேரும் காயமடைந்தனர்.
அதிகாலை 4.00 மணிக்கு கிடைக்கப்பெற்ற தகவலை சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் இதில் இரு கார்களில் அறுவர் காயமடைந்து கிடந்ததாகவும் பெனாவார் தீயணைப்பு, மீட்புப் படை பேச்சாளர் ஒருவர் கூறினார்.

காயமடைந்தவர்களை ஜோகூர்பாரு, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மரணமடைந்த ஆடவரின்  சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும அவர் சொன்னார்.

No comments:

Post a Comment