Friday 21 December 2018

வேதாவுக்கு ஆதரவாக இந்திய சமுதாயம் அணி திரளுமா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோதலுக்கு பின்னர் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்திக்கு எதிராக குரல்கள் வலுபெற்று வரும் நிலையில் இந்திய சமுதாயம் அவருக்கு பின்னால் அணிவகுக்குமா? என்ற கேள்வி எழுகிறது.

கடந்த மாதம் 26ஆம் தேதி இந்த ஆலயத்தில் நடைபெற்ற மோதலின்போது கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி மரணமடைந்தார்.

இவரின் மரணத்திற்கு பின்னர் ஒருமைப்பாடு- சமூகநலத் துறைக்கு பொறுப்பேற்றுள்ள பொன்.வேதமூர்த்தி அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று அம்னோ உட்பட பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள  பெர்சத்து, பிகேஆர் கட்சிகள் கூட கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், இந்திய சமுதாயத்தின் எழுச்சி பேரணியான ஹிண்ட்ராஃப் பேரணியில் ஒரு தலைவராக செயல்பட்ட வேதமூர்த்திக்கு ஆதரவாக இந்திய சமுதாயம் களமிறங்குமா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

ஆலய விவகாரம் விஸ்வரூபம் அடைந்ததைத் தொடர்ந்து ஐசெர்ட் விவகாரத்தில் உயிர் பெற்ற வேதமூர்த்திக்கு எதிரான எதிர்ப்பலை தற்போது முகமட் அடிப் மரணத்தில் மீண்டும் துளிர் விட்டுள்ளது.

இன ரீதியிலான கருத்துகளை முன்வைத்து வேதமூர்த்திக்கு எதிராக எழுப்பப்படும் குரல்வளையை நெறிக்க இந்திய சமுதாயம் தனது அரசியல் வேறுபாடுகளை களைந்து வேதமூர்த்திக்கு ஆதரவாக அணி சேருமா? அமைச்சர் பதவியில் வேதமூர்த்தி நீடிப்பதற்கான தனது ஆதரவு குரலை இந்திய சமுதாயம் உயர எழுப்புமா? என்ற கேள்வி தொடர்கிறது.

No comments:

Post a Comment