Monday 17 December 2018

தேமு சிறப்பு கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் - மணிமாறன் வலியுறுத்து


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
ஆபத்தான் சூழலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் தேசிய முன்னனி தேசிய, மாநில அளவிலான கலந்துரையாடலை நடத்தி பங்காளி கட்சிகளின் கருத்துகளை கேட்டறிவது  காலத்தின் கட்டாயம் என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

நாட்டின் 14ஆவது பொதுதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தை இழந்த தேசிய முன்னணி மீண்டும் தன்னை வலுபடுத்திக் கொள்ளவும் சீரமைக்கவும் கலந்துரையாடல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், ஆட்சி அதிகாரத்தை இழந்த பின் கூட்டணியை விட்டு  பல கட்சிகள் வெளியேறிய நிலையில் இப்போது இக்கூட்டணியில் அம்னோ, மஇகா, மசீச ஆகியவை மட்டுமே எஞ்சியுள்ளன.

தற்போது அம்னோவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறி பிற கட்சிகளில் இணைவது அம்னோவுக்கு பலவீனமாகும். இந்நிலை தொடர்ந்தால் தேசிய முன்னணி  மிகவும் பலவீனமான கூட்டணியாக மாறிவிடும்.
இதனை சரி செய்ய  தேசிய முன்னணி சிறப்பு கலந்துரையாடலை மாநில, தேசிய அளவில் நடத்தி தனது பலவீனத்தை களைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதனை செய்யத் தவறினால் 61 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள தேசிய முன்னணி நாளைய வரலாற்றிலிருந்து காணாமல் போய்விடலாம் என்று மணிமாறன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment