Wednesday 19 December 2018

முகமட் அடிப் மீதான தாக்குதல் கொலை வழக்காக மாறியது

ஷா ஆலம்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது கடுமையான தாக்குதலுக்கு ஆளான தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் வழக்கை கொலை வழக்காக மாற்றியது காவல்துறை.

இதுநாள் வரை 307 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த இச்சம்பவம் இனி 302 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரிக்கப்படவுள்ளது. இதில் குற்றஞ்சாட்டப்படுபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலை அப்துல் ரஷீட் அப்துல் வஹாப் தெரிவித்தார்.

கடந்த மாதம் 26ஆம் தேதி சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த மோதலின்போது தீ வைக்கப்பட்ட கார்களின் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த முகமட் அடிப்பை ஒரு கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

ஐஜேஎன் -இல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த முகமட் அடிப்பின்
உடல்நிலை நேற்று முன்தினம் மோசமானதைத் தொடர்ந்து நேற்றிரவு 9.41 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

No comments:

Post a Comment