Thursday 20 December 2018

அமைச்சர் பதவியிலிருந்து வேதா விலக வேண்டும்- பல்வேறு தரப்பினர் நெருக்குதல்

கோலாலம்பூர்-
பிரதமர் துறை அமைச்சர் பதவியிலிருந்து பொ.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றன.

கடந்த மாதம் சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின் போது தாக்கப்பட்ட தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் நேற்று முன்தினம் மரணமடைந்ததைத் தொடர்ந்து வேதமூர்த்திக்கு இந்த நெருக்குதல் அதிகரித்துள்ளது.

ஒருமைப்பாடு- சமூகநலத் துறைக்கான அமைச்சர் பொறுப்பை வகிக்கும் வேதமூர்த்தி நாட்டு மக்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்வதில் தோல்வி கண்டுள்ளார் என கூறி அம்னோ இளைஞர் பரிவு உட்பட நடப்பு அரசாங்கமான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த பெர்சத்து, பிகேஆர் கட்சியின் கூட வேதமூர்த்தி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment