Tuesday 11 December 2018

சொத்துகளே இல்லை; எப்படி அறிவிப்பது? - வேதமூர்த்தி

கோலாலம்பூர்-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) அறிவிப்பதற்கு தன்னிடம் எவ்வித சொத்துகளும் இல்லை என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.

என்னிடம் சொத்துகள் இல்லை. என்னுடைய மாத வருமானத்தை மட்டுமே அறிவிக்கிறேன்.

என்னுடைய வாழ்நாள் முழுவதும் போராட்டத்திலேயே கழிந்து விட்டது. என்னுடைய வருமானம் அனைத்தும் ஏழ்மையிலுள்ள இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவே என்னுடைய வருமானம் செலவிடப்பட்டுள்ளது.

எவ்வித சொத்துடையும் என்னிடம் கிடையாது. 15 ஆண்டுகளாக நான் வழ்க்கறிஞர் தொழிலை மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன். சாதாரண நிலையிலேயே நான் உள்ளேன் என்று நாடாளுமன்ற வளாகத்தில் பேசும்போது வேதமூர்த்தி கூறினார்.

No comments:

Post a Comment